search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் வீட்டில் வெள்ளி கொள்ளை"

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×